WELCOME to Information++

Wednesday, September 10, 2025

தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது....


தேங்காய் பால்  சிக்கன் பிரியாணி செய்வது....

தேவையான அளவு :

சிக்கன் - 1 கிலோ, 

தேங்காய் பால் அரிசியின் அளவுக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளவும்.

சீரக சம்பா அரிசி - 1 கிலோ, 

வெங்காயம் - 2, 

இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,

கிராம்பு - 1 டேபிள் ஸ்பூன்,

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்,  

பட்டை - 1 டேபிள் ஸ்பூன்,

முந்திரி - 4, , 

எலுமிச்சம் பழம் - 1, 

பச்சை மிளகாய் - 2, 

தயிர் - 1/2 கப், 

நெய் - 1 டேபிள் ஸ்பூன், 

புதினா - தேவையான அளவு,   

கொத்தமல்லி - தேவையான அளவு,

எண்ணெய் - தேவையான அளவு, 

உப்பு - தேவையான அளவு, 

செய்முறை :

பிரியாணி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பட்டை, கிராம்பு சேர்த்து, அரிசியை உதிரியாக வேக வைத்து வடித்து வைக்கவும். 

மீதம் இருக்கும் பட்டை, கிராம்பை இஞ்சி, பூண்டுடன் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரியை தனியாக அரைக்கவும். அதன் பிறகு கொத்தமல்லி இலை, புதினா, சேர்த்து தனியாக அரைக்கவும். 

குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். 

அடுத்து அதில் அரைத்த வெங்காய மசாலாவை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பச்சை வாசனை போனவுடன் அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

சிக்கன் வெந்து, மசாலா சுருண்டு வந்ததும், வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து கிளறி, அரை மணி நேரம் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி தயார். 

#sivakarthikasamayal

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...