சிக்கன் சால்னா செய்வது எப்படி
---
தேவையான பொருட்கள்:
கோழி – ½ கிலோ (சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டவும்)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
மல்லி தூள் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
கறிவேப்பிலை – கொஞ்சம்
கொத்தமல்லி இலை – கொஞ்சம்
---
வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள்:
தேங்காய் – ½ கப்
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
முந்திரி – 5
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
(இவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து, அரைத்துக் கொள்ளவும்.)
---
செய்வது எப்படி:
1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
2. பின் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
4. கழுவி வைத்த கோழி துண்டுகளை சேர்த்து கலக்கி 5 நிமிடங்கள் வதக்கவும்.
5. இப்போது அரைத்த தேங்காய் மசாலாவையும் தேவையான தண்ணீரையும் சேர்த்து கலக்கவும்.
6. மிதமான சூட்டில் மூடி வைத்து கோழி வெந்துவரை சமைக்கவும்.
7. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
No comments:
Post a Comment