WELCOME to Information++

Thursday, January 1, 2026

கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி...


கத்திரிக்காய் பிரியாணி  செய்வது எப்படி...

செய்முறை :

  அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். 

  குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

  பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் கத்திரிக்காய் போட்டு நன்கு வதக்கவும். 

  கத்திரிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் தயிர் ஊற்றி வதக்கி அரிசியையும் போட்டு நன்கு கிளறவும்.

  4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், நெய் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து முந்திரி, கடலைப்பருப்பு (வறுத்ததை) போட்டு சாதம் உடையாமல் கிளறி பரிமாறலாம்.

  மணமணக்கும் கத்திரிக்காய் பிரியாணி ரெடி!.

  புதுவிதமான பிரியாணியை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

No comments:

Post a Comment

இரண்டு வகையான கீரை பருப்பு வடை செய்வது எப்படி

இரண்டு வகையான கீரை பருப்பு வடை செய்வது எப்படி --- 1️⃣ அரைக்கீரை பருப்பு வடை தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1 கப் அரைக்கீரை ...