வெஜிடபிள் சமோசா செய்வது எப்படி...
தேவையானவை:
மைதா மாவு 250 கிராம், உருளைக்கிழங்கு 250 கிராம், பச்சைப் பட்டாணி 50 கிராம், பச்சை மிளகாய் இஞ்சி விழுது ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் 10, சீரகம், சோம்பு தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை 2 டேபிள்ஸ்பூன், கரம்மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன், வனஸ்பதி 50 கிராம், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப் பட்டாணி மற்றும் கழுவி, நறுக்கிய உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து குழையாமல் வேகவிட்டு எடுத்து, நீரை வடிகட்டி வைக்கவும். வனஸ்பதியை லேசாக சூடாக்கி... மைதா, உப்பு, சீரகத்தூள் சேர்த்து, நீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து, எட்டு பாகங்களாக செய்து, நீளவாக்கில் தேய்க்க வேண்டும். அடிகனமான வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு சேர்த்து, வெடித்ததும் முந்திரி சேர்த்து, பிறகு பச்சை மிளகாய் இஞ்சி விழுது சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள், முந்திரி போட்டுக் கிளறவும். வெந்த உருளைக்கிழங்கு (தோல் உரிக்கவும்), பட்டாணியை சேர்த்து வதக்கி இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி வைக்கவும்.
நீளமாகத் தேய்த்த மாவினை முக்கோணம் மாதிரி செய்து, வெந்த கலவையில் 3 ஸ்பூன் உள்ளே வைத்து மூடி சமோசாக்கள் செய்துவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை 'சிம்’ மில் வைத்து, செய்துவைத்த சமோசாக்களை பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: சமோசாக்கள் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் இருக்க வேண்டும்.
#sivaaarthika
No comments:
Post a Comment