தக்காளி காரப்பணியாரம் செய்வது எப்படி......
தேவையானவை: இட்லி மாவு- 2 கப், பெங்களூர் தக்காளி- 3 (பொடியாக நறுக்கவும்) கேரட் துருவல், ஊறவைத்த பச்சைப் பட்டாணி தலா- 3 டேபிள்ஸ்பூன், ரஸ்க்தூள்- 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, நறுக்கிய கொத்தமல்லித்தழை- 2 டேபிள்ஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, எண்ணெய்- 6 டேபிள்ஸ்பூன், உப்பு சிறிதளவு.
செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி... கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... கேரட் துருவல், பட்டாணி சேர்த்து வதக்கி, தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, இறுதியில் ரஸ்க்தூளையும் சேர்த்து வதக்கி இறக்கி, கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு, இந்தக் கலவையை இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் குழிகளில் சிறிதளவு எண்ணெய் விட்டு, மாவை முக்கால் குழி வரை ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
#sivaaarthika
No comments:
Post a Comment