WELCOME to Information++

Wednesday, August 13, 2025

5 - வகையான பிரியாணி செய்வது எப்படி ......

5 - வகையான பிரியாணி செய்வது எப்படி ......

சிக்கன் பிரியாணி
தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி – 2 டம்ளர்
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன
பட்டை – 2
லவங்கம் -5
ஏலக்காய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
தயிர் -2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

பிறகு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரியும் வரை கிளறவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் .

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் மல்லியிலை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் சிக்கன் போட்டு 5 நிமிடங்கள் வரை அதனை நன்றாக வதக்கவும்.

வதங்கியதுதும் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விடவும். பிறகு, ஊறவைத்த அரிசியை எடுத்து குக்கரில் பரவலாக போடவும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவேண்டும்.

குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆப் செய்ய வேண்டும். அப்போதுதான் பிரியாணி குழையாமல் வரும்.

சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான பிரியாணி தயார்.

🔥🔥🔥🔥🔥🔥🍁🍁🍁🍁🔥🔥🔥🔥

மட்டன் பிரியாணி
தேவையான பொருள்கள்
500 கிராம் பாசுமதி அரிசி
500 கிராம் மட்டன்
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
1/2 கப் தயிர
4 to 5 பச்சை மிளகாய்
1 மேஜைக்கரண்டி இஞ்சி பேஸ்ட்
1 மேஜைக்கரண்டி பூண்டு பேஸ்ட்
4 பிரியாணி இலை
1 மேஜைக்கரண்டி சீரகம்
1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
7 கிராம்பு
3 ஏலக்காய்
1/2 மேஜைக்கரண்டி சோம்பு
1/2 மேஜைக்கரண்டி மிளகு
மிளகாய்த்தூள் தேவையான அளவு
2 பட்டை
2 நட்சத்திர பூ
2 மேஜைக்கரண்டி மல்லி
1 ஜாதிபத்திரி
எண்ணெய் தேவையான அளவு
நெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி ஒரு கை
புதினா ஒரு கை
செய்முறை
முதலில் ஒரு கடாயில் ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஜாதிபத்திரி, நட்சத்திர பூ, பட்டை, 5 கிராம்பு, ஒரு ஏலக்காய், சீரகம், மிளகு, சோம்பு, 2 பிரியாணி இலை மற்றும் தனியாவை ஒன்றாக சேர்த்து சுமார் 3 நிமிடம் வரை வறுக்கவும்.

இவை சிறிது நிறம் மாறியதும் அதை மிக்சியில் போட்டு நன்கு நைசாக தூள் செய்து கொள்ளவும்.

இப்பொழுது குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய்யை ஊற்றி சுட வைக்கவும்.

பின்பு அதில் மஞ்சள் தூள், அவர் அவர் விருப்பத்துக்கு ஏற்ப மிளகாய்த்தூள், மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாதூளை சேர்த்து நன்கு கிளறவும்.
அடுத்து அதில் சிறிது அளவு கொத்தமல்லி, மற்றும் ஒரு கை அளவு புதினா சேர்த்து ஒரு கிளறு கிளறி பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.

பின்னர் அதில் அரை கப் அளவு தயிர் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு அதில் மட்டனை போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சரியாக 4 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வைக்கவும்.((இளம் கறியாக இருந்தால் 4 விசிலும் சிறிது முத்துன கறியாக இருந்தால் 6 விசிலும் வைக்க வேண்டும்).

4 விசில் வந்ததும் குக்கரைத் திறந்து மட்டன் வெந்ததை உறுதி செய்த பின் அதில் பாசுமதி அரிசியை போட்டு மீண்டும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும்.3 நிமிடத்திற்கு பிறகு ஸ்டவ்வை ஆஃப் செய்து விட்டு 10 லிருந்து 15 நிமிடம் வரை குக்கரை திறக்காமல் அப்படியே வைக்கவும்.

15 நிமிடங்களுக்கு பிறகு குக்கரை திறந்தால் உங்கள் சூடான மற்றும் சுவையான மட்டன் பிரியாணி தயார்.

இப்பொழுது இதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதன் மேலே சிறிது கொத்தமல்லி தூவி ரைத்தா உடன் பரிமாறலாம்.
இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

🍁🍁🍁🍁🍁🍁🔥🔥🔥🔥🍁🍁🍁🍁

மீன் பிரியாணி
தேவையான பொருள்கள்
1/2 கிலோ மீன்
1/2 கிலோ பாசுமதி அரிசி
3 தக்காளி
1 பெரிய வெங்காயம்
3 பச்சை மிளகாய்
1 எலுமிச்சம்பழம்
1/4 கப் தேங்காய்
1 கப் தேங்காய் பால்
1/2 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்
1/4 மேஜைக்கரண்டி மல்லித் தூள்
1/4 மேஜைக்கரண்டி சீரக தூள்
1/4 மேஜைக்கரண்டி சோம்பு தூள்
1/2 மேஜைக்கரண்டி சோம்பு
5 துண்டு இஞ்சி
13 பூண்டு பல்
6 கிராம்பு
8 ஏலக்காய்
2 துண்டு பட்டை
1 பிரியாணி இலை
1/4 மேஜைக்கரண்டி கரம் மசாலா
8 to 10 முந்திரி
எண்ணெய் தேவையான அளவு
நெய் தேவையான அளவு
மிளகாய் தூள் தேவையான அளவு
சிறிதளவு புதினா
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் மீனை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி வைத்து பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பின்பு வெங்காயம், தக்காளி, தேங்காய், முந்திரியை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய், 3 ஏலக்காய், சோம்பு, மற்றும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது சிறு சிறு துண்டங்களாக ஆக்கி வைத்திருக்கும் மீனை ஒரு bowl ல் போட்டு அதில் தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

பின்பு அதில் கால் மேஜைக்கரண்டி மிளகுத் தூள், சோம்பு தூள், மல்லி தூள், சீரகத் தூள், ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு பிரட்டி அதை சுமார் 25 நிமிடம் வரை அதை அப்படியே ஊற விடவும்.

25 நிமிடத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 10 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 4 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்டதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத் துமீன் பொரித்தெடுத்த எண்ணெய்யை வடி கட்டி அதில் சேர்த்து சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்டதும் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, மற்றும் ஒரு பிரியாணி இலையை சேர்த்து அதை வதக்கவும்.

இவை வதங்கியதும் அதில் 2 பச்சை மிளகாய், முந்திரி, மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மிளகுத் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் 3 மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.

இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து இந்த மசாலாவில் சேர்த்து பக்குவமாக கிளறி விடவும்.

அரிசியை நன்கு கிளறி விட்டதும் அதில் ஒரு கப் அளவு தேங்காய் பால் ஒன்றரை கப் அளவு தண்ணீர் மற்றும் மீதமுள்ள எலுமிச்சம் பழ சாறை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்பு குக்கரில் மூடியை போட்டு விசில் போடாமல் சுமார் 2 நிமிடம் வரை ஆவி வரும் வரை அதை வேக விடவும்.

2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு மூடியை திறந்து 2 கரண்டி அளவு பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் மீனை சாதத்தில் வைத்து சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.

பின்பு தட்டில் இருக்கும் சாதத்தை அதன் மேலே போட்டு மீதமுள்ள மீன், புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றி மூடி போட்டு விசில் வைத்து சுமார் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு பின்பு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு குக்கரை அடுப்பிலேயே 3 நிமிடம் வரை வைத்திருக்கவும்.

3 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட ரைத்தா உடன் பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ஃபிஷ் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

🍁🍁🍁🍁🍁🍁🔥🔥🔥🔥🍁😊

முட்டை பிரியாணி
தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம் - 3
கடைந்த தயிர் - 1 கப்
எண்ணெய் - அரை கப்
நெய் - கால் கப்
உப்பு - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
அரைக்க தேவையான பொருட்கள்:
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 6
பச்சை மிளகாய் - 5
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியைக் நன்றாக கழுவி ஊறவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள். அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் ஊற்றி சுட்டெடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கவும்.

எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வெந்நீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள்.

இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும். சூப்பரான முட்டை பிரியாணி தயார்....
🍁🍁🍁🍁🍁🔥🔥🔥🍁🍁🍁🍁🍁🍁

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி
தேவையான பொருள்கள்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்
புதினா - 1/2 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு
சிக்கன் - 1/2 கிலோ
கெட்டியான புளிக்காத தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரியாணி மசாலா பொடிக்கு
சோம்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 4
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி, பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பிரியாணி மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வர பிரட்டி விட்டு, தட்டி கொண்டு மூடி 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் குக்கரில் வாணலியில் உள்ள சிக்கனுடன் கூடிய மசாலாவை போட்டுக் கொள்ள வேண்டும். பின் அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அதையும் குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி, புதினா, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும்.

விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி ரெடி!!!.
🍁🍁🍁🍁🍁🍁🍁🔥🔥🔥🔥🍁🍁

No comments:

Post a Comment

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி

ஐந்து வகையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி --- 1) கிளாசிக் பட்டர் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் பொ...