பூண்டு புதினா தோசை செய்வது எப்படி......
தேவையானவை:
ஆலு தோசை மாவு – 2 கப்,
பூண்டு – 20 பற்கள்,
புதினா (கழுவி, பொடியாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
பூண்டுப் பற்களை தோலுரித்து, நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். மிளகாயைப் பொடியாக நறுக்கவும். 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டை அரைப்பதமாக வதக்கி எடுக்கவும். 1 டீஸ்பூன் எண்ணெயில் புதினாவை லேசாக வதக்கி வைத்துக்கொள்ளவும்.
மாவை ஊத்தப்பமாக ஊற்றி அதில் சீரகம் சிறிது தேய்த்துப் போட்டு, அதன் மேல் வதக்கிய பூண்டு + புதினாவை பதிக்கவும். ஒவ்வொரு ஊத்தப்பத்துக்கும் 6-லிருந்து 7 துண்டு பூண்டு பதிக்கலாம்.
எண்ணெய் ஊற்றி வேகவிட்டு, பின் திருப்பிபோட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் சேர்த்து இதை சாப்பிட்டால், சுவை அமோகம்.
#sivaaarthika
No comments:
Post a Comment