கார போளி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
மாவுக்கு:
மைதா – 2 கப்
உப்பு – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – மாவு பிசைய தேவைக்கு
பூரணத்துக்கு:
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
இஞ்சி – 1 டீஸ்பூன் (நறுக்கியது)
கடலை பருப்பு – ½ கப் (வேக வைத்து மசியவைத்தது)
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
மாவு:
1. மைதா, உப்பு, மஞ்சள் சேர்த்து எண்ணெய் ஊற்றி மென்மையான மாவாக பிசைக்கவும். 20 நிமிடம் மூடி ஊற விடவும்.
பூரணம்:
2. கடாயில் எண்ணெய் சூடாக்கி சீரகம் தாளிக்கவும்.
3. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. மஞ்சள், மிளகாய் பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.
5. மசிய வைத்த கடலை பருப்பு சேர்த்து நன்றாக கலந்து கெட்டியான பூரணமாகும் வரை வதக்கவும்.
போளி:
6. மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, நடுவில் பூரணம் வைத்து மூடி மெதுவாக உருட்டி தட்டவும்.
7. சூடான தவாவில் லேசாக எண்ணெய் தடவி இருபுறமும் சிவக்க வேகவிடவும்.
சுவையான கார போளி தயார்!
#sivaaarthika
No comments:
Post a Comment